திருமணத்தின் போது பட்டு அணிய காரணம்
marriage problem | vasiyam | maha guru balaji
பட்டு ஆடைகள் என்ன காரணத்திற்காக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது? அதிலும் குறிப்பாக திருமணத்தின் போது பட்டு தான் அணிய வேண்டும் என சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் உள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் ஆன்மிக மற்றும் அறிவியல் காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய பாரம்பரிய முறையில் பட்டிற்கு மிக முக்கியமான பங்கு உண்டு. கோவிலில் தெய்வங்களுக்கு பட்டு துணிகள் மட்டும் தான் அணிவிப்பார்கள். அதே போல் திருமணம் என்றே அங்கு முதலிடம் பிடிப்பது பட்டும், தங்கமும் தான். திருமணத்தின் போது மணமக்கள் மட்டுமின்றி, திருமணத்தில் கலந்து கொள்ள செல்வபவர்களும் பட்டு ஆடைகள் உடுத்திச் செல்வது தான் நம்முடைய பாரம்பரிய வழக்கம். அதே போல் கோவிலுக்கு செல்லும் போதும், எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும் பட்டு உடுத்துவது வழக்கம்.
இந்த பட்டு ஆடைகளை ஆடம்பரத்தின் அடையாளமாக தான் அனைவரும் பார்க்கிறார்கள். தன்னுடைய செல்வ செழிப்பை காட்டுவதற்காக தான் விலை அதிகம் உள்ள பட்டு ஆடைகளை திருமணத்தில் கட்டாயமாக அணிகிறார்கள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்த ஒவ்வொரு பாரம்பரிய சடங்குகள், சம்பிரதாயத்திற்கு பின்னால் ஆன்மிகம், அறிவியல், விஞ்ஞானம் என பல வகைகளிலும் நமக்கு நன்மைகள் பல வழங்கக் கூடிய எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அப்படி நமக்கு தெரியாத ஒரு ஆச்சரியமூட்டும் விஷயம் தான் பட்டு.
பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து, உடலிற்கு வலிமை அளிக்கும். திருமண வீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும், மண மகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டு உடுத்த வேண்டும் என வைத்துள்ளனர். இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றன. கோவில்களுக்கு செல்லும் பொழுது ஏன் பட்டு புடவை அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.
பட்டிற்கு தோஷம் கிடையாது. அதனால் தான் எத்தனை வகையான புடுவைகள் வந்தாலும் பட்டு புடவைக்கு இருக்கும் மதிப்பு காலம் காலமாக குறையாமல் உள்ளது.தெய்வங்களுக்கு குறிப்பாக அம்மனுக்கு சாற்றப்படும் பட்டுப்புடவையில் நேர்மறை சக்திகள் அதிகம் ஈர்க்கப்பட்டிருக்கும். அந்த பட்டுப்புடவையை நம்முடைய வீட்டில் வைத்திருந்தாலோ அல்லது நாம் அணிந்து கொண்டாலோ அளவில்லான நன்மைகளையும், தெய்வத்தின் அருளையும் பெற முடியும் என்பதால் தான் கோவில்களில் அம்மனுக்கு சாற்றிய பட்டுப் புடவைகளை ஏலம் எடுப்பதற்கு அதிகமானவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.



0 கருத்துகள்